செவ்வாய், 1 நவம்பர், 2016

தந்தைக்கு ஒரு தாலாட்டு!



பத்துமாதம் வயிற்றுக்குள்
   பத்தியமாய்ச் சுமக்கவில்லை!
சித்தத்தில் உன்நினைவைச்
   சிறிதேனும் இறக்கவில்லை!    
                                                  (பத்துமாதம்)

தாலாட்டிப் பாலூட்டிப்
   பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
ஆளாகி நீஉயர
   அறிவுருத்த மறப்பதில்லை!       
                                              (பத்துமாதம்)

உயிரிருந்தால் போதுமென்ற
   உணர்வுடனே இருப்பதில்லை!
உயிருக்குள் உனைவைத்த
   உள்ளுணர்வைச் சொல்வதில்லை!
                                               (பத்துமாதம்)
     
தந்தையிவர் எனக்காட்டும்
   தாய்மட்டும் உயர்வில்லை!
சிந்தையிலே சிறைவைத்த

   தந்தைக்கோ நிகரில்லை!
                                                 (பத்துமாதம்)


பாவலர் அருணா செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக