புதன், 8 பிப்ரவரி, 2012

பருவ வயது (கவிதை)


                                                                  

பருவ வயதிலே                    
    பாவையின் நெஞ்சமோ
        பறந்திடும் காற்றாடி!


உருவ வடிவிலே
    காளையர் மனத்தினை
        உடைத்திடும் கண்ணாடி!


அரும்பு மனத்திலே
    ஆசையும் வளருதே
        அதிசயம் என்னாடி?


கரும்புக் கணையிலே
    காமனும் துறத்தவே
        காதலின் வண்ணமடி!!

(அறுசீர் விருத்தம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக